சத்துணவு பணியாளர் சங்க கூட்டம்

மதுரை, ஜன. 2: தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட அமைப்புக் கூட்டம் மதிச்சியத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அயோத்தி முன்னிலை வகித்தார். செயலாளர்கள் எம்.பி.குணசேகரன், போஸ்.ராஜ்குமார் வரவேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளராக வெள்ளியங்குன்றம் துரைப்பாண்டி, துணை அமைப்பாளராக மாங்குளம் பாண்டி, நிதிக்காப்பாளராக குணசேகரன் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இம்மாத இறுதிக்குள் மாவட்ட அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பணி மேற்கொள்வது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Related Stories: