கலசபாக்கம், ஜன.3: கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் 20 கிராமத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளராக உள்ளனர்.இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன் வங்கி நாயுடுமங்கலம் கூட்ரோட்டுக்கு ஏடிஎம் வசதியுடன் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டு என்பதால் விடுமுறை விடப்பட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று வழக்கம் போல் வங்கி திறக்கப்பட்டது. அப்போது, வங்கி அருகே உள்ள ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.