திருத்துறைப்பூண்டி, டிச.28: திருத்துறைப்பூண்டி அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் டத்தினர்.திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016-17ம் ஆண்டில் 382 பேருக்கு 80 சதவிகிதமும், 148 பேருக்கு 19 சதவிகிதமும் பயிர் காப்பீட்டு தொகை வந்தது. இதிலுள்ள குளறுபடிகளை நீக்கி அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மீண்டும் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து எழிலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் நேற்று விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.