புதுக்கோட்டை, டிச.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் கணேஷ் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடந்த ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடற்ற வளாகங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களான விரிப்பு, தட்டு, தண்ணீர் பாக்கெட், பை போன்றவற்ளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.