கோவில்பட்டி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

கோவில்பட்டி, டிச.21: வைகுண்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சங்கரலிங்கம். இவர் வைகுண்டத்தில் இருந்து மதுரையில் லோடு ஏற்றி வருவதாக டிப்பர் லாரியை ஓட்டி சென்றார். கோவில்பட்டி அருகே நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் சபையை கடந்து சென்றபோது, லாரியின் பின்பக்க டயர் அச்ச கட்டாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நெடுஞ்சாலையின் தடுப்புசுவரில் பயங்கரமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சங்கரலிங்கம் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினார். தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று, லாரியை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: