சென்னை: சென்னையை சேர்ந்தவர்கள் ரவி, ராமலிங்கம், சேவியர் ஆண்டோ கவாசினி. இவர்கள் கப்பலில் பணியாற்றுவதற்கு தேவையான சான்றிதழ் வழங்கக்கோரி மத்திய அரசின் கடல் ஆலோசகர் அலுவலகத்தில் விண்ணப்பத்தனர். விண்ணப்பத்தில் அவர்கள் போலி அனுபவ சான்றிதழ் கொடுத்திருந்தனர். இதனை கண்டுபிடித்த அதிகாரி மிஸ்ரா என்பவர் விவகாரம் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்தோணி பிச்சை என்பவர் மூலம் ₹55 ஆயிரம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது.