சென்னை, டிச. 19: தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்காமல் மத்திய ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்த அனைவருக்கும் உடனே பணி வழங்க வேண்டும் என்று அகில இந்திய ரயில்வே அப்ரண்டீஸ் சங்கம் சார்பில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.