விசிக ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவில், டிச. 18: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காட்டுமன்னார்கோவில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசு வரவேற்றார். தொகுதி செயலாளர் மணவாளன், சக்திவேல், ராவணன், ஜெயசீலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கஸ்பா பாலா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்திற்கு சென்று எச்.ராஜா மீது புகார் அளித்தனர்.

Related Stories: