புதுச்சேரி, டிச. 18: தெருக்கூத்து ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் தெருக்கூத்து கலை விழா விழுப்புரம், பள்ளித்தென்னல் திரவுபதியம்மன் கோயில் திடலில் வருகிற 22ம்தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தமிழர்களின் முதல் கலையான தெருக்கூத்து கலையை போற்றும் வகையிலும், அதற்கு ஊன்றுகோலாக இருக்கும் தெருக்கூத்து ஆளுமைகளை சிறப்பிக்கும் நடைபெறும் இந்த கலைவிழாவில் மூத்த ஆசிரியர்களும், இளம் ஆசிரியர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். வாலி மோட்சம், விராட பருவம் எனும் தலைப்புகளில் நடைபெறும் தெருக்கூத்து கலைவிழாவில் ஆசிரியர்கள் சின்னதுரை, லட்சுமணன், ராமு, பக்கிரி, மதியழகன், சுந்தரமூர்த்தி, மிருதங்கம் செல்வம், கிருஷ்ணராஜ், நகைச்சுவை நாயகர்கள் ராஜி, சம்பத் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.