புதுச்சேரி, டிச. 18: புதுவையில் ராகுல்காந்தியை கண்டித்து நியமன எம்எல்ஏக்கள் உள்பட பாஜகவை சேர்ந்த 100 பேரை பெரியகடை போலீசார் பாதியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.ரபேல் போர் விமான தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, சங்கர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் பாலாஜி தியேட்டர் சந்திப்பில் திரண்டனர்.