புதுச்சேரி, டிச. 18: உலக சமநிலை இயக்கத்திற்காகவும், இயற்கை சீற்றங்கள் கட்டுப்படவும், மக்களிடையே அமைதி, ஆனந்தம் பெருகவும் புதுச்சேரி கோலாஸ் நகர் வீரமாமுனிவர் வீதியில் உள்ள ஆனந்த பிரபஞ்ச பீடம் சார்பில் இன்று காலை 6 மணி முதல் 22ம் தேதி மாலை 6 மணி வரை ஞானகுரு ஆனந்த பிரம்ம ஞானி 100 மணி நேரங்களுக்கு மேலாக தொடர் தியானம் மேற்கொள்ள உள்ளார். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெறும் இந்த தியான நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி இன்று காலை துவக்கி வைக்கிறார். அமைச்சர் நமச்சிவாயம் நிறைவு செய்து வைக்க உள்ளார்.