திருப்பூர், டிச.18: திருப்பூரில், சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக் கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருப்பூரில், சீட்டு மோசடியில் ஏமாந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், மேட்டுபாளையம் பஸ் ஸ்டாப் ராம்மூர்த்தி நகர் பகுதியில் அக்ரோபாம் இண்டியா என்கிற தனியார் சீட்டு கம்பெனியை பிரவீன் என்பவர் நடத்தி வந்தார்.அவரிடம் திருப்பூர் மாநகர பகுதியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதம் ரூ.300 முதல் ரூ.2000 வரை 5 வருடத்திற்கு மேல் செலுத்தி வந்தோம். பின்னர், சீட்டு பணத்தை கடந்த பல மாதங்களாக கேட்டு வந்த நிலையில் தவணை சொல்லி வந்தனர்.