காலாப்பட்டு, டிச. 12: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விமல்ராஜ் (29). இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (28) உடன் அருகில் உள்ள மீனவ கிராமமான முதலியார்குப்பத்திற்கு பைக்கில் சென்றனர். அப்போது முதலியார்குப்பத்தை சேர்ந்த சுகுமார், விமல்ராஜ் மற்றும் தினேசை வழிமறித்தார். ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்ததால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுகுமார் தனது நண்பர்கள் இளங்கோ (31), ஞானவேல் (31), விக்கி (25) ஆகியோரோடு சேர்ந்து விமல்ராஜையும், தினேசையும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து விமல்ராஜ் சுகுமார் மீது கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.