புதுச்சேரி, டிச. 12: புதுவை பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறை, சமூக அறிவியல், சர்வதேச கல்வி துறை மற்றும் கல்வி துறை ஆகியவை சார்பில் தேசிய கல்வி தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கி பேசும்போது, கல்வியின் மதிப்பை அங்கீகரித்து மதித்து உணர வேண்டும். இந்திய கல்வி முறை, உலகின் மிகச்சிறந்த கல்வி முறையாகும் என்றார். வரலாற்று துறை பேராசிரியர் சந்திரிகா வரவேற்றார். சமூக அறிவியல் மற்றும் சர்வதேச கல்வி புல டீன் வெங்கட்ட ரகோத்தம் கல்வி செயல்பாட்டில் ஆசிரியரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகள் மூலம் விவரித்தார்.