லாரி மோதி அரிசி வியாபாரி பலி

ஜெயங்கொண்டம், டிச.11: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கைக்களத்தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி(62). இவர், சைக்கிளில் சென்று அரிசி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று தத்தனூர் அருகே சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த போது ய்வேலியிலிருந்து சிமெண்ட் ஆலைக்கு கரி ஏற்றிவந்த லாரி  சைக்கிள் மீது மோதியது. இதில் பழனியாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: