அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி சங்க பேரவை கூட்டம்

நாமக்கல், டிச.11: போக்குவரத்து கழகத்தில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி சங்கத்தின் பேரவை கூட்டம், நேற்று தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் முருகராஜ், பொருளாளர் பொன்னுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் தம்பிராஜா ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். கூட்டத்தில், போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் ஆய்வு பலன்கள் விருப்பு வெறுப்பின்றி உரிய காலத்தில் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் வாரிசு பணியாளர்களுக்கு, 240 நாட்கள் பணி முடிந்த உடன், சட்டப்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Related Stories: