தேன்கனிக்கோட்டை, டிச.11: தேன்கனிக்கோட்டையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து மாதக்கணக்கில் பைபாஸ் சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்து வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பைப்லைன் பதித்துள்ளனர். இந்நிலையில், பைபாஸ் சாலையோரம் போடப்பட்டுள்ள குழாயில் பழுது ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் ரோட்டில் தேங்கி, பல்வேறு இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சிதிலமடைந்த சாலையில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.