தென்காசி, டிச. 11: சொத்துவரியை திரும்பப்பெறக் கோரி தென்காசியில் நகர திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தென்காசி நகராட்சி காட்டுபாவா பள்ளியில் இருந்து வாய்க்கால்பாலம் வரையிலான குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெற வேண்டும். தென்காசி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தை மத்தளம்பாறை ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யவிருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மவுண்ட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் சிந்தாமணி ராஜா தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு முகமது இஸ்மாயில், நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், பால்ராஜ், கலைபால்துரை, ஷேக்பரீத், பாலா, அப்துல்கனி முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் சாதிர் வரவேற்றர்.