செய்யாறு, டிச.7: செய்யாறு அருகே பெண் தொழிலாளி வீட்டில் 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹80 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.செய்யாறு அடுத்த கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் மனைவி ஜோதி(36). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ஜோதி, சிப்காட்டில் உள்ள காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டு, தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஜோதி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மகள் கலையரசி, மகன் யுவராஜ் ஆகியோர், வீட்ைட பூட்டிக்கொண்டு ஆக்கூர் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர், மாலை பள்ளி முடிந்ததும் யுவராஜ் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதிறிக்கிடந்தது.