3 பேர் கைது விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

விருதுநகர்,டிச.5: விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள தகவல்: சென்னை, தாம்பரம் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் திருநெல்வேலி வ.உ.சி விளையாட்டு அரங்கில் ஏர்மேன் பதவிக்கு ஆட்சேர்ப்பு முகாம் டிச.9 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாமில் இந்திய விமானப்படையில் ஏர்மேன் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் நடைபெறும். டிச.12ல் விருதுநகர்  மாவட்டத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். ஏர்மேன் பதவிக்கான கல்வித்தகுதி, உடற்தகுதிகள் மற்றும் பிற விவரங்களை  www.airmenselection.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: