கரூர், டிச. 5: கரூர் வெங்கமேடு பாலத்தின்கீழ் கழிவு மண்ணை அகற்றாததால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர்பகுதியில் வடிகால் தூர்வாரும் நடைபெறுகிறது. கரூர் வெங்கமேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள வடிகால் தூர்வாரப்பட்டது. இயந்திரம் மூலம் எடுக்கப்பட்ட கழிவுமண்ணை வடிகால் அருகிலேயே குவித்து விட்டு போய் விட்டனர். வடிகால் மண் அகற்றும் பணிக்கு ஒப்பந்தம் எடுப்பவர்கள் மண்ணை அகற்றி அதனை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை. வடிகால் அருகிலேயே குவித்து வைத்து விட்டு போய் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.