திருச்சி, டிச. 4: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்துரிமை மின் புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமை மையம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான மின்புத்தகங்களை பல்கலைக்கழக வலைதளபக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத் ராம் சர்மா, துணைவேந்தர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். துணைவேந்தர் மணிசங்கர் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை அறிவுசார் சொத்துரிமை மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தரராமன் செய்திருந்தார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.