துரைப்பாக்கம், நவ. 28: காயலான் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.பெருங்குடி பகுதியில், மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. பெருங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் சேரும் குப்பை சேகரிக்கப்பட்டு நாள்தோறும் டன் கணக்கில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.குப்பைக்கிடங்கை ஒட்டி சில காயலான் கடைகள் உள்ளன. பெருங்குடி மற்றும் சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த பலர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு உள்ள பழைய இரும்பு, பிளாஸ்டிக், பாட்டில் ஆகியவற்றை பொறுக்கி, காயலான் கடைகளில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.