உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா டேனிஷ் கோட்டையை 2000 பேர் இலவசமாக பார்வையிட்டனர்

தரங்கம்பாடி,நவ.28: நாகை மாவட்டம் தரங்கம்பாடியிலுள்ள டேனீஷ் கோட்டையை உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவில் 2000 பேர் இலவசமாக பார்வையிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழா நவம்பர்19 முதல் 25 வரை நடைபெறும் அந்த ஒரு வாரமும் தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையை இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல்துறை அறிவித்திருந்தது. அதையொட்டி டேனீஷ் கோட்டையை ஒரு வாரத்தில் 2041 பேர் இலவசமாக பார்வையிட்டுள்ளனர். மேலும் இவ்வாரத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: