புதுச்சேரி, நவ. 27: புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் சாரங்கபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையும், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், தேசிய வாழ்வாதார சேவை மையமும் இணைந்து அலிம்கோ என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் வழங்கும் ஏடிஐபி திட்டத்தின் கீழ் இலவச மூடநீக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்துள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூடநீக்கு கருவிகள் வழங்கும் விழா இன்று (27ம் தேதி) காலை 10 மணியளவில சமூக நலத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.