பேளுக்குறிச்சியில் ஐயப்ப சேவா சங்க தொடக்கம்

சேந்தமங்கலம், நவ.22: சேந்தமங்கலம்  அடுத்துள்ள பேளுக்குறிச்சியில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் புதிய  கிளை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் பாலமுருகன் தலைமை  தாங்கினார். இதில் மாவட்ட பாரத ஐயப்ப சேவா சங்க துணைத்தலைவர் மணி கலந்து  கொண்டு புதிய கிளையை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் சங்கத்தின்  செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் ரங்கசாமி, துணை செயலாளர் முகேஷ்,  பொருளாளர் பரமசிவம், துணை பொருளாளர் கந்தசாமி உட்பட நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: