காஞ்சிபுரம், நவ. 21: பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக மாதர் சங்கத்தினர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர். மாதர் சங்கம் சார்பில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தில் தர் என்பவர் தன்னை சக்திவாய்ந்த சாமியார் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். இதனை நம்பி, பலர் அவரிடம் ஏமாந்துள்ளனர். இந்நிலையில், ஓதியூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் சாமியார் தரிடம் சென்றுள்ளனர்.