நாமக்கல், நவ.21: மேகனூர் அருகே பரளி அரசு பள்ளியில் மாணவர்கள் தயாரித்த சோப்பு, பினாயில் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மோகனூர் அருகே பரளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 152 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களே சுய தொழில் மூலம் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. பினாயில், கை கழுவும் நீர்மம், சோப்பு பவுடர், பாத்திரம் தேய்க்கும் பவுடர், சீயக்காய் பொடி, குளியல் பொடி மற்றும் காகிதப் பை போன்ற பல்வேறு பொருட்களை மாணவர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.