காரைக்கால், நவ. 20: காரைக்கால் மேலவாஞ்சூர் பகுதியில், நடந்து சென்ற வாலிபரிடம் வழிப்பறி செய்த, நாகை மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்களை திருமலைராயன்பட்டினம் போலீசார் கைது செய்தனர். காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அடுத்த மேலவாஞ்சூர் அருகே உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில், நாகூர் தெத்தி தெருவை சேர்ந்த ஆசைதம்பி (எ) முஜுபூர் ரஹ்மன் (31) என்பவர் 3 மது பாட்டில்களை வாங்கிகொண்டு நடந்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த, நாகை மாவட்டம் அந்தணபேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணகரன் (25) மற்றும் அவரது நண்பர்கள் சிராஜிதீன் (20) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆசைதம்பியை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கிருஷ்ணகரன் பட்டன் கத்தியால், ஆசைதம்பி துகு, கழுத்தில் கீறி, மிரட்டி, அவரிடமிருந்த மதுபாட்டில்கள், ரூ.200 பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.