மாணவியிடம் சில்மிஷம் புரோக்கருக்கு வலை

புதுச்சேரி, நவ. 16:  புதுவை, கோரிமேட்டில் வசிப்பவர் சரவணன் (62), ரியல் எஸ்டேட் பிரமுகர்.  சம்பவத்தன்று தனது வீட்டை ஒட்டிய பகுதியில் வசிக்கும் ஒன்றாம் வகுப்பு  மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி  பாதிக்கப்பட்ட குழந்தை தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவரது தந்தை  மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் திரண்டு சரவணனை தட்டிக் கேட்டனர். அதற்கு  நீங்கள் போலீசிடம் சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என சரவணன்  மிரட்டினாராம். மேலும் பரிகாரமாக பணம் தருவதாகவும் கூறியதாக தெரிகிறது.  இதையடுத்து அந்த பெற்றோர், புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு  தலைவர் ராஜேந்திரனிடம் முறையிட்டனர். அதன்மீது விசாரித்த குழுவினர், தவறு  நடந்திருப்பது உறுதியடுத்தி உடனே சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரிமேடு  போலீசாரிடம் புகார் அளித்தனர். சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா  உத்தரவின்பேரில், வடக்கு எஸ்பி ரக்சனாசிங் மேற்பார்வையில் கோரிமேடு  போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Related Stories: