மஞ்சூர், அக்.16: மஞ்சூர் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கரியமலை பெரியார்நகர். நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றிலும் விவசாயிகள் மேரக்காய், வாழை மற்றும் மலை காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் 2குட்டிகள் உள்பட 6 காட்டு யானைகள் கடந்த 3நாட்களாக பெரியார் நகரை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் இந்த காட்டு யானைகள் அங்குள்ள தோட்டங்களில் புகுந்து மேரக்காய் மற்றும் காய்கறி பயிர் செடிகளை நாசம் செய்து வருகின்றன.