திருவையாறு, நவ. 15: திருவையாறு வட்டாரம் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா சீப்பர்ஸ் திட்டத்தின்கீழ் ஆவிக்கரை கிராமத்தில் சூரியசக்தி பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் தலைமை வகித்தார். வேளாண்மை பொறியியல் துறை இளநிலை பொறியாளர் மாணிக்கவேல் பங்கேற்று சூரியசக்தி மூலம் வேளாண் பயன்பாடு, மானிய திட்டங்கள் குறித்து பேசினார். முகாமில் 40 விவசாயிகள் பங்கேற்றனர்.