குழந்தைகள் தின விளையாட்டுப் போட்டி

காங்கயம், நவ.15: குழந்தைகள் தினத்தை, முன்னிட்டு நத்தக்காடையூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நேற்று நடத்தப்பட்டது.

காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி, உறியடித்தல், சாக்கு ஓட்டம், கோலப் போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று மதிய உணவாக அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அசைவ உணவும், இனிப்புகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் விஜயலட்சுமி பள்ளி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: