உடுமலை, நவ.15:உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் சின்னாறு செக்போஸ்ட் வரை வனப்பகுதியாகும். இரு மாநிலங்கள் இடையே சமூக விரோதிகள் சந்தன மரம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் குறித்து இரு செக்போஸ்ட்களிலும் உள்ள ஊழியர்கள் தகவல் பரிமாறிக்கொள்வது வழக்கம். இதற்காக அவர்களுக்கு வனத்துறை சார்பில் வில்போன் வழங்கப்பட்டிருந்தது. இரு செக்போஸ்ட்களிலும் வாகன எண் பதிவு செய்யப்படுகிறது.கடத்தல் பேர்வழிகள் ஒரு செக்போஸ்ட்டில் தப்பினால் வில்போன் தகவல் மூலம் அடுத்த செக்போஸ்டில் மடக்கி பிடித்து விடுவார்கள்.ஆனால், கடந்த ஒரு மாதமாக செக்போஸ்ட் ஊழியர்களிடம் வில்போன் இல்லை.