அரியலூர்,நவ.14: அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 தாலுக்காவிலும் வருவாய் துறையின் சர்வே துறையினரிடம் , கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அனைத்து நிலங்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஒடைகள், சாலைகளின் ஆகியவைகளின் சர்வே எண்ணுடன், வரைபடங்கள் அதன் 4 பக்கம் சுற்று அளவுகள், அதன் பரப்புகள் கொண்ட வரைபடம் சுதந்திரத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்டவை பயன்பட்டில் உள்ளன.
இந்த வரைபடங்களில் ஏரிகள், குளங்கள், ஒடைகள் ஆறுகளை குறிக்கும் வரைபடத்தின் நடுவில் முழுவதும் கோடுகள் வரையபட்டு அந்த அந்த ஏரிகளின் பெயர் எழுதப்பட்டு இருக்கும். இந்த வரைபடங்கள் (திவிஙி) அனைத்தையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் பணிகள் 10 ஆண்டுகள் நடை பெற்று வந்தது. அதில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமத்தின் நிலங்கள், ஏரிகள், குளம், குட்டைகள், ஒடைகள், என அந்த டிஜிட்டல் வரைபடங்கள் அனைத்தும் தற்போது வருவாய்துறை இணையத்தில் வெளியிட்டு உள்ளது.