கரூர், நவ. 14: செந்தில் பாலாஜி விடுத்த சவாலை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் 3 கால்நடை மருந்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார். ரங்கநாதபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது:அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோம். நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கின்றனர் என்றார். அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை என்றார்.