புதுச்சேரி, நவ. 14: புதுவை, அரசு பொது மருத்துவமனையில் உட்புற நோயாளிகளுக்கு கடந்த சில வாரங்களாக மதிய உணவு வழங்கப்படவில்லை. பாப்ஸ்கோ காய்கறி சப்ளையை நிறுத்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே நேற்று மதியம் அங்கு வந்த பாஜக நியமன எம்எல்ஏவும், மாநில தலைவருமான சாமிநாதன் அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அப்போது உட்புற நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.