கோவை, நவ. 2: கோவை வாலிபருக்கும் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் கலாச்சாரப்படி கோவையில் திருமணம் நடந்தது. கோவை பூண்டி செம்மேடு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, வெள்ளையம்மாள் தம்பதியின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர், 2008ல் ஸ்காட்லாந்தில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவர் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஸ்காட்லாந்தை சேர்ந்த அலிஷியா டெய்லர்(26) என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.