கூடுவாஞ்சேரி, நவ.2: வேங்கடமங்கலம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதனை செங்கல்பட்டு தாசில்தார் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சியில், வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இதில், ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினமங்கலம் கிராமத்தில் லட்சுமி குபேரர் திருக்கோயில், தாகூர் பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவமனை உட்பட அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், ரத்தினமங்கலம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம், பிளாஸ்டிக் ஒழித்தல் மற்றும் மழைநீர் சேகரித்தல் பணி ஆகியவற்றை லட்சுமி குபேரர் திருக்கோயில் அருகில் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தார். இதனை செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன், தலைமை நில அளவையர் நாகராஜ் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு முகாம்,