நாகர்கோவில், நவ.2: நாகர்கோவிலில் அமமுக பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்டது தொடர்பாக அதிமுகவினர் மீது கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி அமமுக சார்பில் அதன் துணை பொதுச்செயலாளர் தினகரன் புகைப்படத்துடன் பிளக்ஸ் போர்டுகள் நாகர்கோவில் நேசமணி மணி மண்டபம் அருகே, அண்ணா பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே அதிமுக சார்பிலும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை அமமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டு கிடந்தன. இது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதன் மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமையில் நேற்று கோட்டார் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: