மதுரை, நவ.1: மதுரை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், அழகர்கோவில் ரோட்டில் உள்ள, கோ.புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. காலை 11 மணி முதல், பகல் 1 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிக்குளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர் மற்றும் மேலமடை பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின்நுகர்வு தொடர்பான குறைகளை நேரில் தெரிவிக்கலாம்,