திருச்சி, அக்.31: உலக முதியோர் தினம் திருச்சி ஒய்.டபிள்யூ.சி.ஏ. கூட்டரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து பேசியதாவது: உலக முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. முதியோர் நலமாக இருக்க மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்கிவருகின்றன. நிதியுதவி பெற்று தொண்டு நிறுவனங்கள் முதியோர் இல்லங்களை சிறப்பாக நடத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 24 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பெற்றோர்களையும், மூத்த குடிமக்களையும் பாதுகாப்பது வாரிசுகளின் அடிப்படை கடமையாகும். பெற்றோரை பராமரிக்கவில்லை எனில் வாரிசுகள் செய்ய வேண்டிய அடிப்படை கடைமைகளை சட்டம் சுட்டிக்காட்டும்.