சேலம், அக்.30: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சேலம் மண்டல பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்குகிறது. இதற்கான தொடக்க விழா, குரங்குச்சாவடி அருகில் உள்ள ஐஓசிஎல் பெட்ரோல் பங்கில் நேற்று நடந்தது. ஐஓசிஎல் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், போட்டியை தொடங்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்களை வழங்கினார். ₹200க்கு மேல் பெட்ரோல் நிரப்பிய டூவீலர்களுக்கும், ₹ஆயிரத்துக்கும் மேல் பெட்ரோல் நிரப்பிய கார்களுக்கும் அறிவுத்திறன் போட்டிக்கான கூப்பன் வழங்கப்பட்டது.
விழாவில், சேலம் மண்டல துணை பொது மேலாளர் பழனிக்குமார், சீனியர் மேலாளர்கள் அப்பண்டிராஜன், சரத்பாபு, ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். 8 பகுதிகளில் நடைபெறும் போட்டியில் 72 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.