நீடாமங்கலம், அக்.30: டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டப்பிரிவின் கீழ் சம்மந்தப்பட்ட வீடுகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் அண்ணாமலை(எ)புவனேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூத்தாநல்லூர் நகரில் 24 வார்டுகள் உள்ளது. வார்டுகளில் உள்ள மக்களிடம் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசுவை ஒழித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு வீடுகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கான ஆதாரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள்,