ஜெயங்கொண்டம், அக்.30: ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் பரிதாபாணு தலைமை வகித்தார். வெத்தியார்வெட்டு ரத்தினவேல் புதிய சிலிண்டர் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, இலவச எரிவாயு அடுப்பு பெறுவது எப்படி எனவும் கேட்டார். விவசாயிகள் சங்க பிரதிநிதி பாண்டியன் கிராமங்களில் வீடுவீடாக சென்று சிலிண்டர் வழங்குவது இல்லை. சுமார்ட் கார்டில் போட்டோ பெயர் மாறியுள்ளதால் பலவித ஆவணங்களுக்கு அடையாள அட்டையாக வழங்க முடியவில்லை என்றனர். இதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவது:
சுமார்ட் கார்டு குழப்பங்கள் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் சரிசெய்யப்பட்டு வருகிறது. மேலும் அதிக அளவில் மாறுதல் இருக்கும் கிராமங்களில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இலவச அடுப்பு, இலவச எரிவாயு பெறுவதற்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.