கஞ்சா கடத்திய 5 பேர் கைது

உத்தமபாளையம், அக்.26: கோம்பை போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் கேரளா மாநிலம் இடுக்கிமாவட்டத்தை சேர்ந்த ஆனந்த்(19), அமுல்பாபு(21), அமீர்(19), கோம்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருள்பிரசாத்(23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனை செய்த கோடாங்கிபட்டியை சேர்ந்த மூதாட்டி மயில்தாய் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: