தா.பேட்டை, அக்.25: முசிறி சந்திரமவுலீஸ்வரர் சிவாலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றது. கோயிலில் 50 கிலோ அன்னத்தினால் சிவலிங்கத்திருமேனி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது விவசாயம் செழிக்கவும், உலகில் பஞ்சம், பசி பட்டினி இன்றி சுபிட்சமாக வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதை தொடர்ந்து காவிரி ஆற்றில் மீன்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன், தாசில்தார் சுப்ரமணியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முசிறி சிவாலயத்தில் அன்னாபிஷேகவிழா
- ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன்
- அரசு
- பங்கேற்பாளர்கள்
- தாசில்தார் சுப்பிரமணியன்
- திருவிழா
- முசிறி சிவாலயம்
- Annapishtha