வத்தலக்குண்டு, அக்.25: வத்தலக்குண்டு அருகே ஒன்றரை மாதமாக தண்ணீர் வரவில்லை என்று கூறி கலைஞர் காலனி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி கலைஞர் காலனியில் 200 வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த ஒன்றரை மாதமாக தண்ணீர் வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மருதம் மக்கள் கழக மண்டல செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் முத்துச்செல்வி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.