தேனி, அக். 23: தேனி நகராட்சியில் துப்புரவுப்பணியின்போது, துருபிடித்த ஊசி குத்தியதில் கையை இழந்த பணியாளர் தனக்கு மாற்றுப்பணி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தேனி நகராட்சிக்குட்பட்ட ஒண்டிவீரன் காலனியில் குடியிருப்பவர் சேகர்(51). இவர் கம்பம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து, கடந்த ஆண்டு தேனி நகராட்சிக்கு மாறுதலாகி வந்தார். கடந்த ஆண்டு தேனி நகராட்சி 4 வது வார்டில் கழிவு நீரோடையில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் கையுறை எதுவுமின்றி பணிசெய்தார். அப்போது,நோயாளிகளுக்கு மருந்து செலுத்தப்படும் ஊசி இவரது கையில் குத்தியது. இதற்கு உரிய சிகிச்சை பார்க்காத நிலையில் இவரது கையில் சீழ் பிடித்து ஆபத்தான நிலைக்கு சென்றார்.