புதுச்சேரி, அக். 17: புதுவை தியேட்டரில் கலாட்டாவில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட தியேட்டர் ஊழியரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 வாலிபர்களை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். புதுவை, ஆலங்குப்பம், அன்னை நகர், அம்பேத்கர் வீதியில் வசிப்பவர் இருசப்பன் மகன் சிலம்பரசன் (22). காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் விநியோகஸ்தராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த தியேட்டருக்கு வந்த 3 வாலிபர்கள் பெண்களை கேலி கிண்டல் செய்தபடி கலாட்டாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் சிலம்பரசிடம் முறையிடவே, 3 பேரையும் அவர் தட்டிக் கேட்டுள்ளார்.